சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது…!!
Read Time:1 Minute, 9 Second
காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த கீரிமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை இனவாலை பொலிஸார் திங்கட்கிழமை (21) கைதுசெய்துள்ளனர்.
உயரப்புலம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கடந்த 1 வருடமாக காதலித்த வந்த குறித்த இளைஞன் திருமணம் செய்வதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையடுத்து அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சிறுமியிடம் வாக்குமூலங்களை பெற்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளஞனை சட்டவைத்திய அதிகாரி முன் ஆஜர்செய்து மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Average Rating