விமானமும் , பயணிகள் பேரூந்தும் மோதி விபத்து..!!
Read Time:1 Minute, 4 Second
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எயார் இந்தியா விமானமும், ஜெட் ஏர்வேஸ் பயணிகள் பேரூந்தும் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜெட்ஏர்வேஸ் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விமானம் மீது மோதியுள்ளதாகக தெரிவிக்கப்படுகின்றது. பஸ் சாரதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating