யாழ் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் மூவர் படுகாயம்..!!
Read Time:1 Minute, 1 Second
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சரசாலையைச் சேர்ந்த எஸ்.ஜனார்த்தனன் (வயது 20) இநுணாவில் மேற்கைச் சேர்ந்த ஜேசுராஜா செல்வராசா (வயது 48) மற்றும் மீசாலையைச் சேர்ந்த தேவேஸ்வரன் ஜெனந்தன் (20) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
Average Rating