சிரியா பள்ளி மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்: 9 மாணவிகள் பலி…!!
Read Time:1 Minute, 21 Second
சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று நடத்திய பீரங்கி தாக்குதலில் ஒன்பது மாணவிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பக குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டெய்ர் அல் ஸோர் நகரில் அரசுப்படைகளுக்கு எதிராக பீரங்கி தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் வீசிய குண்டுகளில் ஒன்று, அரசு கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் இயங்கிவரும் பள்ளியின்மீது விழுந்து வெடித்ததாகவும், இந்த தாக்குதலில் ஒன்பது மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் மனித உரிமை கண்காணிப்பக குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த மேலும் சிலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating