ஆரணி அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியின் உதட்டை கடித்த வாலிபர் கைது…!!
ஆரணி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா(வயது19). பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு விளாப்பாகத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2–ம் ஆண்டு படிக்கிறார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அருள் (30) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 17–ந்தேதி காலையில் வீட்டின் பின் பகுதியில் நித்யா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு திடீரென அருள் வந்தார். நித்யாவின் உதட்டை கடித்தார். இதனால் நித்யா அலறி துடித்தார்.
அவரது சத்தம் கேட்டு தந்தை அங்கு ஓடிவந்தார். அருளை பிடிக்க முயன்றார். ஆனால் நித்யாவின் தந்தையை அருள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி வழக்குப்பதிவு செய்து அருளை தேடி வந்தார்.
இந்த நிலையில் சேவூர் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அருளை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Average Rating