டிஜிபவுதியில் மதசடங்கின் போது மோதல்: 7 பொதுமக்கள் பலி..!!
Read Time:1 Minute, 8 Second
ஆப்பிரிக்க நாடான டிஜிபவுதியின் தலைநகர் டிஜிபவுதிக்கு அருகே உள்ள புல்தாகோ மாவட்டத்தில் மத சடங்கின் போது நடந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்தாகோவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மதச்சடங்கைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்திருந்தனர். இருவர் ஏ-கே (கலாஷ்னிகோவ்) ரக துப்பாக்கியும் வைத்திருந்தனர்.
இதனால் போலீசார் அந்த மத சடங்கை தடை செய்ய அங்கு வன்முறை வெடித்தது. அப்போது நடந்த மோதலில் 7 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating