தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரிய இளைஞன்…!!

Read Time:1 Minute, 38 Second

1385434பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

19 வயதான கெரி ஹில்டன் எனும் இந்த இளைஞன், தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு பெண்கள் பலரை வற்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

கெரி ஹில்டனினால் தொந்தரவுக்குள்ளான பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்யச் சென்றனர்.

வேலியொன்றுக்கு மேலாக கெரி ஹில்டன் பாய்ந்து செல்வதைக் கண்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது போதை நிலையிலிருந்த கெரி ஹில்டன், தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துமாறு பல தடவை சத்தமிட்டார் என லின்வூட் நகர நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையொன்றின் போது தெரிவிக்கப்பட்டது.

தன் மீதான 3 குற்றச்சாட்டுகளை கெரி ஹில்டன் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, அவரை பாலியல் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பசியில் வாடும் சிரிய அகதிகளுக்கு உணவளிப்பதற்காக பஸ்ஸை நடமாடும் சமையலறையாக மாற்றிய நபர்..!!
Next post தனது நத்தார் பரிசுப்பொருட்களை சிரிய அகதிகளுக்கு விநியோகிக்குமாறு நத்தார் தாத்தாவிடம் கோரிய சிறுவன்…!!