இஸ்தான்புல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு: பெண் பலி…!!
Read Time:58 Second
துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார்.
துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரிகள் அவ்வப்போது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்தான்புல் நகரில் உள்ள சபிஹா கோக்கென் சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் விமானங்களை சுத்தம் செய்யும் பெண் பணியாளர் பலியானதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating