சந்தவாசல் பஸ் நிலையம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 40 Second

4739938d-a7c0-4e12-8993-6c391107acee_S_secvpfதிருச்சி மாவட்டம் உறையூர் விருப்பாட்சிபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). இவரது மனைவி ரம்யா (26). மாமியார் நாகலெட்சுமி மற்றும் அவரது 10 வயது மகளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு காரில் புறப்பட்டு வந்தனர். டிரைவர் ரகுநாதன் (38) என்பவர் காரை ஒட்டி வந்தார்.

இன்று காலை 5 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் பஸ் நிலையம் அருகே கார் வந்தது. அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் திடீரென மோதியது.

கார் முன் பகுதி நொறுங்கியது. காரில் இருந்த முத்துக்குமார் காருக்குள்ளேயே இறந்தார். ரம்யா, நாகலட்சுமி, டிரைவர் ரகுநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

10 வயது சிறுமி காயமின்றி தப்பினார். சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் பலியான முத்துக்குமார் உடல் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சந்தவாசல் போலீசார் சப்–இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் பஸ்சில் தவறி விழுந்து எல்.ஐ.சி. ஊழியர் பலி…!!
Next post பதினாறாக குறைத்தும் பலனில்லை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 13 வயது சிறுவன் கைது…!!