மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!

Read Time:5 Minute, 44 Second

1937169_471613716357968_2126732966476360844_n-615x308ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருட்மபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது.

ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது. அது போல நம்மிடையே இருநிலை மனிதர்கள் & காந்த சக்தி பெற்ற மனிதர்கள் மன உறுதி, நம்பிக்கை, அன்பு இவற்றை வாழ்வின் மூலதனமாக்கி வெற்றிக்கனியை பறிப்பவர்கள் (Magnetized man) சந்தேகம், மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றினால் இழுத்துச் செல்லப்படும் மனிதர்கள் அநேகம். (Demagnetized man) இவர்கள் காந்த சக்தி அற்றவர்களுக்கு நிகரானவர்கள். சாதா இரும்புத்துண்டைப் போன்றவர்கள். அதிக சக்தி, அதிக ஆற்றல், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ஆனந்தக் கோட்டையின் இருப்பிட பொக்கிஷம் நமது ஆழ்மனது & அடிமனது Super Conscioicus mind & அகமானது (subconscious mind) இங்கே நமது அற்புத சக்திஇடி, மின்னலுக்கு இணையான ஆற்றல்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளது & மாயப்பெட்டியாக உள்ளது.

மந்திர சக்திகளின் சங்கமாக உள்ளது. அதை திறக்கும் மந்திர சாவியே பயன்படுத்தும் கலையே அற்புத வாழக்கை கலை. நீங்கள் உள்மனது. அகமானது, சூப்பர் மனதில் பயணம் செல்லும் சமயம் வாழ்வின் புதிய ஒளியை, மின்னல் கீற்றை புதிய சக்தியை அறிந்திடுகிறீர்கள். உணர்ந்து அனுபவம் செய்கிறீர்கள். அகமனது, ஆழ்மனது விழித்தெழந்து செயல்படும் சமயம் உங்களிடம் புதிய அற்புத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், அறிவுமாற்றம், ஆரோக்கியம், புதிய உத்வேகம், உன்னத எழுச்சி. அன்பின் ஆளுமை உருவாகும். இச்சக்தியை அறியலாம்.

உணரலாம். பார்க்க இயலாது. அனுபவிக்கலாம். அற்புத குணப்படுத்தும் சக்தி உங்கள் மனது, உடல் திசுக்களைச் செம்மைப்படுத்துவதுடன் உடைந்த உள்ளத்திற்கு மருந்திட்டு எழுச்சியடையச் செய்திடுகிறது. பிறருக்கும் நன்மைகள் புரிகின்றன. கணித விதி: 2+2= 4 இரசாயன விதி : பி2+ளி = பி2ளி கணிதம், இரசாயனம், பௌதிகம் விதிகள் (Principles) கொள்கைகள் போல் அகமனதும் ஒருவித கோட்பாட்டில், கொள்கையில் மிக இயல்பாக தெளிவாக நேர்த்தியாக இனிமையாக வெளிப்பட்டு இயங்கும்.

தண்ணீர் உயரத்தில் இருந்து கீழே பாயும். வெப்பத்தால் கனிமப் பொருட்கள், திரவங்கள் விரிவடையும் இதுபொது விதி & எல்லா நாடுகளுக்கும், எல்லா இடத்திற்கும் ஏற்புடைய விதி அதைப்போல உங்கள் ஆழ்மனது அகமனது (Sub Conscious mind) பொக்கிஷத்தை திறக்க அற்புத மந்திர சாவி தியானம், ஜபம், பிரேயர் அல்லது நம்பிக்கை விதி (Law of Nature) (Law of faith) (Law of Life) இயற்கை விதி & வாழ்க்கை விதி உள்ளன. நமது ஆழ்மனதும் செயல்விதி, எதிர் செயல்விதி என்ற தத்துவத்தில் இயங்குகிறது.

அதை இயக்கும் கலையை அடைய இயற்கை விதிகளை உணர்ந்து, கடைப்பிடித்திட வேண்டும். உய¢அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தத்தில் மின்சக்தி பாய்வது போல் நமது மனசக்தியும் ஆழ்மனதில் இருந்து நமது வாழ்வின் செயல்கள் வெளிப்பட வேண்டும்.

அச்சமயம் மேல் மனது, புறமனத தேவையற்ற சக்திகள் குறைந்து அற்புத ஆற்றல் கிட்டிடும். புறமனது என்பது கடல் மேல் அலை போல் அலைபாயும். ஆழ்மனது அமைதி கடலாக இருக்கும். கடலின் அடிவாரம் போல் அமைதியாக அலையற்று இருக்கும். மனம் இருநிலையில் உள்ளது இருகுணங்களில் உள்ளது.

Objective Conscious Waking || Subjective Subconscious Sleeping Mind மேல் மனது || ஆழ்மனது அலையும் மனது || அமைதி மனது காரண மனது || இயல்பு மனது இச்சை மனது || அனிச்சை மனது Voluntary || involuntary நமது மனதை ஒரு தோட்டத்திற்கு ஒப்பிடலாம். நாம் அதன் தோட்டக்காரர்.

நாம் எதை விதைக்கிறோமோ, எதைப் பற்றிய எண்ணங்களைச் சிந்திக்கிறோமோ அவைகள் விளையும், பெருகும் & அமைதி, சந்தோஷம், மகிழ்ச்சி, கருணை, அன்பு விதைகளை விதைக்க ஆழ்மனது அருமையான அற்புத நிலைக்கு உயருகின்றது. மாயசக்தியாக நமக்கு பிறருக்கும் ஒளிபிரவாசகமாய் பிரகாசிக்க ஆரம்பிக்கிறது. நமது பிராண சக்தி, உள் ஒளி சக்தி, காந்த சக்தி அபரிதமாக ஜொலிக்க ஆரம்பிக்கிறது. எனவே வாழ்க்கை சூத்திரம் நம்பிக்கையில் தொடங்குகிறது.

ஆழ்மனது வழி நடத்தும் சமயம் நாட்ம இயல்பாக, இனிமையாக, சுகமாக வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அதற்கான எளிய வழி தியானம், இயற்கை உணவுகள், இயற்கை சூழல் வாழ்வு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் : கர்பப்பையில் பராமரித்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!
Next post மனிதன் நசுங்கி சாவதை நேரில் பார்த்த பெண்…!!