ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மீது மேலும் ஒரு வழக்கு

Read Time:1 Minute, 29 Second

tamil_1.jpgசென்னையில் சில தினங்களுக்கு முன்பு வல்லமை தாராயோ படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது முப்பெரும் தேவியர் சிலைகள் முன், செருப்பு கால்களுடன் நடிகை குஷ்பு கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். இதுகுறித்து கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும், சென்னை சைதாப் பேட்டை நீதி மன்றத்திலும் தனித் தனி யாக வழக்குகள் தொடரப் பட்டது. இந்நிலையில், ராமேஸ்வரம் இந்து முன்னணி நகர தலைவர் கண்ணன் சிவா சார்பில், வக்கீல் ராமமூர்த்தி ராமேஸ்வரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், அரசியல் சட்டம் 295, 295 ஏ பிரிவுகளின் படி, மத உணர்வுகளை தூண்டி கேலி செய்யும் வகையில் நடிகை குஷ்பு நடந்துள்ளார். அவரை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை விசாரித்த நீதிபதி விசாரணையை 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்
Next post இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீது மேற்கொள்ளப் படவிருந்த தற்கொலைத் தாக்குதல்!! தீவிரவாத பெண் வெடித்து சிதறும் காட்சி;டெலிவிஷனில் ஒளிபரப்பு! (வீடியோ பதிவு)