பாலத்துக்கு அருகில் பாதணிகள்: தாய், மகள் மாயம்..!!
Read Time:1 Minute, 12 Second
மாத்தளை, மாநாம பாலத்துக்கு அருகில், பெண்ணின், கைப்பை, அலைப்பேசிகள் இரண்டு, பெண்களின் பாதணிகள் இரண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 11 மணியளவில் அந்த பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரும் பெண்பிள்ளையொருவரும் வருகைதந்துள்ளனர் என்று தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பையிலிருந்து 7,100 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும், கிடைத்த தகவல்களுக்கு அமைய, இவ்விருவரும் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும், அவ்விருவர் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார், அந்த கங்கையில், கடற்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
Average Rating