குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி..!!

Read Time:1 Minute, 28 Second

download (1)கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த 2 வருடமும் 7 மாதங்களே ஆன சிறுமி வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது குறித்த சிறுமியின் தாய் மற்றும் 7 வயதுடைய சகேதரர் ஒருவரும் முச்சக்கர வண்டியினுள் இருந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்தியவர் உயிரிழந்த சிறுமியின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கல்னேவ, பன்சலை வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலத்துக்கு அருகில் பாதணிகள்: தாய், மகள் மாயம்..!!
Next post சிவனொலிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் இன்று ஆரம்பம்..!!