தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை…!!

Read Time:1 Minute, 52 Second

260dd0a2-1f2e-40dd-b735-9f2c605b4977_S_secvpfதாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தாய்லாந்து கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் கோடாவோ தீவுக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் (23) மற்றும் டேவிட் மில்லர் (வயது 24) ஆகியோர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சுற்றுலா வந்தனர். பவள பாறைகள், ஆமைகள் ஆகியவை நிறைந்து உள்ளதால், டர்டில் தீவு என்று அழைக்கப்படும் பகுதிக்கு சுற்றுலா சென்ற இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பார் ஊழியர்களான சாவ் லின் மற்றும் வாய் பியோ என்ற இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய தாய்லாந்து கோர்ட்டு பார்-ஊழியர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இவர்கள் இருவரும் மியான்மரை சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே விதரிட்ஜ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!
Next post ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி: 2 தீவிரவாதிகள் கைது…!!