ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் மோதல்: 5 பேர் பலி…!!
கோவில்பட்டியில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த காரை நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் ஓட்டி வந்தார். இதே போல் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு கார் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது.
2 கார்களும் அம்பிளிக்கை போலீஸ் நிலையம் அருகே வந்த போது நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டது. இந்த விபத்தில் கார் டிரைவர் சிவசுப்பிரமணியம், 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் வந்த மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அம்பிளிக்கை போலீசார் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இறந்தவர் பெயர் விபரம் தெரியவில்லை. விடுமுறைக்காக சொந்த ஊருக்கோ அல்லது சுற்றுலா செல்லவோ வந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினற்னர்.
Average Rating