ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!
Read Time:1 Minute, 22 Second
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வேன் ஒன்றில் சுற்றுலா சென்ற ஒரே குடுபத்தை சேர்ந்த 08 பேர் இன்று காலை புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில் 07 வயதுடைய சிறுவர்கள் இருவர் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ளனர்.
வாகனத்தில் சென்றவர்களில் 02 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாரதி நித்திரையுடன் அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியதே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating