கிளிண்டன் மனைவி ஹிலாரி அலுவலகத்தில் புகுந்த மனித வெடிகுண்டு
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். அதே கட்சி சார்பில் ஓபாமா பராக் என்பவரும் டிக்கெட் கேட்டு இருக்கிறார். வேட்பாளர் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் தேர்தல் பிரசாரத்தை ஹிலாரி இப்போதே தொடங்கி விட் டார். அவர் இப்போது வெர் ஜினியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஹிலாரியின் தேர்தல் பிரசார அலுவலகம் நிïஹாம் ஷைர் மாகாணத்தில் உள்ள ரோச்சஸ்டர் பகுதியில் உள்ளது. இந்த அலுவலகத்துக்குள் இன்று ஒரு வாலிபன் திடீர் என்று புகுந்தான். அவன் தனது இடுப்பில் ஒரு வெடி குண்டு பெல்ட்டை கட்டி இருப்பதாக கூறினான். அந்த பெல்ட்டையும் அவர் சட்டை யை திறந்து காட்டினான். இதை கேட்டதும் அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.ஹிலாரியுடன் நான் பேச வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் இந்த அலுவலகத்தை தகர்ப் பேன் என்று மிரட்டிய அவன் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தான்.இதைஅடுத்து அதிரடி படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அந்த அலுவலகத்தை சுற்றி வளைத் தனர். அவனுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதை அடுத்து ஒரு பெண்ணையும் அவளது குழந்தையையும் அந்த மர்ம மனிதன் விடுவித்தான். சிறிது நேரம் கழித்து மேலும் 2 பேரை விடுவித்தான்.
சில மணி நேரம் கழித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்தனர்.
அந்த வாலிபன் உடனடியாக கைது செய்யப்பட்டான். பணய கைதிகள் அனைவரும் பத்திர மாக மீட்கப்பட்டனர். கைதான அந்த வாலிபன் பெயர் லீ இசன் பெர்க். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அவன் முன்பு மனநிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றவன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெர்ஜினியாவில் சுற்றுப் பயணம் செய்து வந்த ஹிலாரி தனது நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு உடனடியாக நிïஹாம்ப்ஷைர் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
போலீசார் அவனை சோதனை போட்ட போது அவர் இடுப்பிலும் நெஞ்சிலும் கட்டி வைத்திருப்பது வெடிகுண்டு அல்ல என்பது தெரிய வந்தது. ரோட்டில் வாகனங்கள் செல்வதற்காக ஒளிவீசும் தகடுகள் பதிக்கப்பட்டு இருக் கும். அவற்றைத்தான் அவன் வெடிகுண்டு என்று கூறி மிரட்டியுள்ளான்.