வவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கிய நபருக்கு 28 வரை விளக்கமறியல்..!!
Read Time:1 Minute, 3 Second
வவுனியா ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி க.ஞா.அலஸ்டினும் ஊடகவியலாளரை தாக்கிய சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி க.தயாபரனும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating