உடல் உறுப்புகளை தோண்டி எடுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒப்புதல்: அமெரிக்க உளவு நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்..!!
Read Time:1 Minute, 24 Second
ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகள் தோண்டி எடுக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பத்வா எனப்படும் மார்க்க தீர்ப்பு அடங்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிழக்கு சிரியாவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்களில் அவர்களின் ஆதரவாளர்களின் உயிரை காப்பாற்ற, சிறைப்பிடித்து வைத்துள்ளவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் தோண்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கும்போது அந்த குறிப்பிட்ட நபரின் உயிர் போனால் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களை வைத்து பார்க்கும் போது ஐ.எஸ். தீவிரவாதிகள் உடல் உறுப்புகளை கடத்தும் வேலையில் ஈடுபட்டு வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
Average Rating