இந்தோனேசியாவில் கப்பல் மூழ்கிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு…!!
Read Time:1 Minute, 15 Second
இந்தோனேசியாவில் 110 பேருடன் பயணம் செய்த சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் சுலவேசி மாகாணத்தின் கொலாகோ துறைமுகத்தில் இருந்து ஷிவா தீவுக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் 116 பேர் பயணம் செய்தனர். நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த போது கப்பலை 10 அடி உயர அலைகள் தாக்கியது. இதனால் கப்பல் மூழ்கியது.
மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் 103 பேரை மீட்டனர். இதில் 40 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். 63 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில் காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating