திருவல்லிக்கேணியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: ஐகோர்ட்டு வக்கீல் பலி…!!

Read Time:1 Minute, 50 Second

1c9413b6-8083-4899-a941-e484129c7ebd_S_secvpfசாத்தூரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 39). சென்னை ஐகோர்ட்டு வக்கீலான இவர் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நுங்கம்பாக்கத்தில் பிரியாணி கடையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி நோக்கி சென்றார். விடுதி அருகே அக்பர் தெருவில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் காமராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

தலையில் பலத்த காயம் அடைந்த காமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

பலியான காமராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டிய போது ஹெல்மெட்டை அணியாமல் பெட்ரோல் டேங்க் மீது வைத்திருந்ததாக தெரிகிறது. அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தால் தலையில் காயம் அடையாமல் உயிர் தப்பி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தானில் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 24 பயணிகள் பலி…!!
Next post ராயபுரத்தில் வக்கீல் தற்கொலை…!!