பெண் தீக்குளிக்க முயற்சி-கணவர், குழந்தைகள் படுகாயம்

Read Time:1 Minute, 32 Second

திருச்சி அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்ற போன அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் படுகாயமடைந்தனர். திருச்சியை அடுத்துள்ள பொன்மலைப்பேட்டையைச் சேர்ந்த சந்திரன்-தேவி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கட்டட வேலை பார்த்து வரும் சந்திரனுக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு நடந்ததுள்ளது. இதனால் தேவி நேற்றிரவு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதையடுத்து சந்திரன் தீயை அணைக்க முயன்றார். அப்போது வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் படுக்கையிலும் தீ பரவியது. இதில் அந்தத் தம்பதியும் 3 குழந்தைகளும் பலத்த தீக்காயம் அைடந்தனர். கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். காயமடைந்த 5 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேவியின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகை காவேரியும், வைத்தியும் சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
Next post இந்தியாவில் மொபைல் விற்பனை : அதிகரிப்பு: ஆசியாவில் முதலிடம்