சம்பந்தன்- விக்கி நேற்று கொழும்பில் சந்திப்பு : இணைந்து செயற்படுவது குறித்து பேச்சு..!!

Read Time:1 Minute, 43 Second

download (1)தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க இணைந்து செயற்படுவது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் கொழும்பில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவராக வடக்கு முதலமைச்சர் இணைந்துள்ளதுடன் அது குறித்த முரண்பாடுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் வீட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீண்டகாலத்துக்கு இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரங்களில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பணியாற்றுவது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டது.

தமிழ் மக்களின் நன்மைக்காக எடுக்க வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும். இது குறித்த சந்திப்புக்கள் தொடரும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரியில் ஆரம்பமாகிறது யாழ்.நகரை அழகுபடுத்தல்..!!
Next post விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி..!!