டெல்லி சரோஜினி நகர் ரெயில் பாதையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிப்பு..!!

Read Time:1 Minute, 44 Second

timthumb (1)தலைநகர் டெல்லியின் தெற்குப்பகுதியில் உள்ள சரோஜினி நகர் ரெயில் நிலையம் அருகே அமைந்திருக்கும் தண்டவாளத்தில் பெண் உட்பட மூன்று பேரின் சடலங்களை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும், அச்சடலங்களுக்கு அருகில் காயமடைந்த நிலையில் இருந்த ஒருவரையும் போலீசார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்த மூவரில் ஒருவர் ரமேஷ்(40) என்று தெரிய வந்துள்ளது. அவர் டெல்லி காவல் துறை அதிகாரியின் வீட்டில் சமையல்காரராக பணியாற்றியுள்ளார். பலியான பெண்ணான மீனா (40), அதே வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். மற்றொரு நபரின் அடையாளத்தைக் கண்டறிய முடியவில்லை. அவருக்கு 20 வயது இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இவர்கள் மூவரும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இம்மூன்று சடலங்களுக்கு இடையே பலத்த காயமடைந்த நிலையில் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது பெயர் சூரஜ்பன் (45) என்று தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு விசாரணை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பூரவல்லி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா..?
Next post இத்தாலியிலுள்ள பாடசாலைகளில் பாலியல் கல்வி கற்பிக்க விரும்பும் ஆபாசப் பட நடிகர்…!!