பாகிஸ்தான் அதிபர் முஷரப்புக்கு மன்மோகன்சிங் வாழ்த்து

Read Time:1 Minute, 8 Second

பாகிஸ்தான் அதிபராக மீண்டும் பர்வேஷ் முஷரப் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள உங்களுக்கு எனது சார்பிலும், எங்கள் நாட்டு மக்கள் சார்பிலும், அரசு சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான்-இந்தியா இடையே அனைத்து மட்டத்திலும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள எங்களது அரசு உறுதி கொண்டுள்ளது. இரு நாட்டு மக்களும் பயன் அடையும் வகையில், அமைதிக்கும், ஸ்திரத் தன்மைக்கும் இரு தரப்பிலும் சுமுக பேச்சு வலுப்படும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறப்பு விசா குறித்து லண்டன் ஐகோர்ட்டு மறு ஆய்வு
Next post தமிழர்கள் போராட்டம்: எங்கள் உள்நாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டாம்! -மலேசிய அரசு சொல்கிறது