உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் எடைகுறைப்பு சிகிச்சைக்கு பின்னர் மாரடைப்பால் மரணம்…!!
அமெரிக்காவின் மெக்சிகோ நகரில் வாழ்ந்துவந்த உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் ஆண்டிரெஸ் மொரேனோ(38) மாரடைப்பால் மரணமடைந்தார். சுமார் 450 கிலோ எடையுடன் உலகின் மிகப்பெரிய குண்டு மனிதராக அறியப்பட்ட இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆபரேஷன் மூலம் வயிற்றுப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ கொழுப்புடன் கூடிய நான்கில் மூன்று மடங்கு தசைப்பகுதி அகற்றப்பட்டது.
பின்னர், இரண்டாவதாக நடந்த ஆபரேஷன் மூலம் ஆண்டிரெஸ் மொரேனோவின் அதிகமாக சாப்பிடும் பழக்கத்தை மாற்ற வயிற்றுப் பகுதியில் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தவர், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக மெக்சிகோவின் சோனோரா மாநிலத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
இதற்கு முன்னர் போலீஸ்காரரக பணியாற்றிவந்த ஆண்டிரெஸ் மொரேனோ, குடும்பத்தாருடன் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுவிட முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். வழியில் மூச்சுத்திணறல் அதிகமாகி மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார்.
Average Rating