அருப்புக்கோட்டை அருகே என்ஜினீயர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு…!!

Read Time:1 Minute, 44 Second

35fa6975-6237-4e82-bb9c-ef6b3887071d_S_secvpfவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி தக்கனாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவர் டெல்லியில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி உமாராணி (வயது29). இவர் தனது தோழி ராஜேசுவரியுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றார்.

வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர்கள் பந்தல்குடி தனியார் ஆலை அருகே அதனை நிறுத்தி விட்டு அங்கிருந்து பஸ்சில் சென்றனர்.

கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் ஊர் திரும்பிய உமாராணி தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தோழியுடன் வீட்டிற்கு புறப்பட்டார். அவர்கள் நமச்சிவாயபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் திடீரென உமாராணியை கீழே தள்ளி அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலி, 3 செல்போன் மற்றும் ரூ.500 ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து பந்தல்குடி போலீசில் உமாராணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட ‘மர்ம’ மனிதர்களை வலைவிசி தேடி வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர் – ஆறு பிணங்கள் மீட்பு..!!
Next post இரண்டாவது திருமணம: கணவனை போலீசில் ஒப்படைத்த 4 மாத கர்ப்பிணி மனைவி…!!