இரண்டாவது திருமணம: கணவனை போலீசில் ஒப்படைத்த 4 மாத கர்ப்பிணி மனைவி…!!

Read Time:6 Minute, 3 Second

0ece6218-655c-4989-9a33-a17e4783195a_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பூர் தட்டான்சாவடி பகுதியை சேர்ந்த சாமுராய் மகன் கார்த்திக்ராஜா (24). இவர் டிப்ளமோ படித்து விட்டு திருமணங்களுக்கு மேடை அமைக்கும் வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகள் மோகனபிரியா (27).

இவர் தாரமங்கலத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவரை 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து குடும்ப பிரச்சினை காரணமாக மூன்று வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருடைய கணவர் ரவிசங்கர் உள்ளூர் பெரியோர்களை வைத்து பஞ்சாயத்து பேசி விவாகரத்து பெற்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.

கார்த்திக்ராஜா திருமணங்களுக்கு மேடை அமைக்க செல்லும் போது மோகனப் பிரியாவின் நட்பு அவருக்கு கிடைத்தது. இருவரும் காதலித்து வந்தனர் இந்த நிலையில் கடந்த 2013–ம் ஆண்டு மே மாதம் 23–ந்தேதி இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கேவிலில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இது கார்த்திக் ராஜாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உன்னை விட வயதில் மூத்தவளை திருமணம் செய்தது தவறு என்றும், மேலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்தது தவறு என்றும் மகனிடம் விளக்கி கூறினர். இதனால் இவர் தனது மனைவியை யாருக்கும் தெரியாமல் சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள நாகமலை அடிவாரத்தில் தனிக்குடித்தனம் வைத்தார். தற்போது மோகனப்பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிபோதையில் கார்த்திக்ராஜா சேலம் அம்மாபேட்டை பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் வரும் போது போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கிக்கொண்டார். அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது உறவினர்கள் யார் என்று விசாரித்தனர். இவர் நண்பர்களுக்கு போன் செய்து தனது மனைவியை காவல் நிலையத்திற்கு வரவழைத்தார். இந்த தகவல் தெரிந்து அவரது பெற்றோர்கள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பிரிந்திருந்த தனது மகனை பார்த்த பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர் வடித்து தனது பாசத்தை காட்டி தனது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அப்போது இருந்தே கார்த்திக் ராஜா தனது மனைவி வீட்டில் இரண்டு நாள் என்றும், பெற்றோர் வீட்டில் இரண்டு நாள் என்றும் வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில் கார்த்திக்ராஜாவின் தந்தை கும்பகோணத்தில் மகனுக்கு வேலை வாங்கி கொடுத்து அங்கு அனுப்பிவைத்தார். உன்னை விட 3 வயது மூத்த பெண்ணுடன் குடும்பம் நடத்துவது நல்லதல்ல என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

தனது பெற்றோரின் வாக்கை வேத வாக்காக எடுத்துக்கொண்ட கார்த்திக்ராஜா கும்பகோணம் சென்றவர் மீண்டும் கடந்த இரண்டு மாதங்களாக தனது மனைவியிடம் பேசாமல் இருந்து உள்ளார். கணவரை காணவில்லை என்று அவரது மனைவி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

இவரின் புகாருக்கு எந்தவித பதிலும் இல்லாத காரணத்தால் சேலம் மாநகர ஆணையாளரிடம் மூன்று முறை புகார் செய்து உள்ளார். இதிலும் முன்னேற்றம் இல்லை. இந்த நிலையில் அவரது கணவர் போன் செய்து ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வருமாறு மனைவியை அழைத்து உள்ளார். அவரும் ஓமலூர் வந்தார்.

கணவரை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த சந்தோஷம் வெகுநேரம் நீடிக்கவில்லை. கணவர் கார்த்திக் ராஜா பார்த்தவுடன் வயிற்றில் இருக்கும் நான்கு மாத கர்ப்பத்தை கலைத்து விடும்படி கேட்டு உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது காதல் மனைவி மோகனப்பிரியா பொதுமக்கள் துணையுடன் அவரை பிடித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை விசாரித்த ஓமலூர் போலீசார் சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ஏற்கனவே வழக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் அங்கிருந்து வந்த போலீசார் கணவன்–மனைவி இருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருப்புக்கோட்டை அருகே என்ஜினீயர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு…!!
Next post குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் உடைப்பு…!!