காதல் வயப்பட்ட 15 வயது சிறுமியின் நிலை..!!
Read Time:1 Minute, 20 Second
15 வயதான சிறுமியை கடத்தி சென்று அவருடன் உறவு கொண்ட 31 வயதான நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மதுரங்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் மதுரங்குளி, சுகதகம பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியை ஒன்றை கடத்தி சென்றுள்ளார்.
குறித்த குழந்தை தொடர்பாக பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டின் பின்னரே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
15 வயதான சிறுமி குறித்த நபருடன் காதல் வயப்பட்டு இருந்ததாகவும் அவர் பாடசாலைக்கு செல்வதில்லை எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
Average Rating