திருச்சி சிறை வளாகத்தில் கைதி தற்கொலை முயற்சி
Read Time:1 Minute, 18 Second
திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், செத்தவாரி நடுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசனின் மகன் கருப்பன் என்கிற சண்முகம் (23). சண்முகத்தை தஞ்சை கிழக்குப் போலீசார் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறை அறையில் தனியாக இருந்த சண்முகம் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதை தற்செயலாக கவனித்த கைதிகள் சிலர் சத்தம் போடவே சிறை அதிகாரிகள், சக கைதிகள் ஓடி வந்து சண்முக்தை காப்பாற்றினர். ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.