ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 116 வீடுகள் எரிந்து சாம்பல்…!!
Read Time:1 Minute, 24 Second
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 116 வீடுகள் எரிந்து சாம்பலானது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கோடை வேயில் கொளுத்துகிறது. இதனால் அங்குள்ள வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு காட்டுத்தீ பரவியது.
காட்டுத்தீ வனப்பகுதியை ஒட்டி பெருங்கடல் ரோட்டில் உள்ள வைரிவர் மற்றும் கிரீக் ஆகிய 2 நகரங்களிலும் பரவியது. இதனால் அங்கு வாழும் மக்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத்தீயில் 116 வீடுகள் எரிந்து சாம்பலாயின. அவற்றில் வைரிவர் பகுதியில் 98 வீடுகளும், கிரீக் பகுதியில் 18 வீடுகளும் அடங்கும்.
பெருங்கடல் ரோடு பகுதி ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சுற்றுலா பகுதியாகும். அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அந்த ரோட்டில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Average Rating