மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக்கொலை: சோகத்தில் தவித்த வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை…!!
ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி தோப்புவலசை கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக, கடந்த 30.9.2012–ம் தேதி குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பையா (வயது62), இவரது மகள் காளிமுத்து (32), இவரது குழந்தைகளான காளீஸ்வரி (12), சரண்யா (6), பாலமுருகன் (8), சக்திபாலா (3) ஆகியோர் எரித்து கொல்லப்பட்டனர். இது தொடர்பாக, உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.
இதையடுத்து, வெளி நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய காளிமுத்துவின் கணவர் கள்ளழகர், மனைவி, குழந்தைகள் இறந்ததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால், கடந்த 2 முறை தற்கொலைக்கு முயன்ற அவர் காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3–வது முறையாக, தோப்பு வலசையில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
இதையறிந்த அவரது உறவினர், அவரை மீட்டு ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கள்ளழகர் நேற்று உயிரிழந்தார். உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating