மாணவி கற்பழிப்பை படம் பிடித்து இணையதளத்தில் பரப்பிய பள்ளி தோழிகள் 2 பேர் கைது…!!
வாலிபரை அழைத்து சென்று மாணவியை கற்பழிக்க வைத்து படம் பிடித்து இணையதளத்தில் பரப்பிய பள்ளி தோழிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திடுக்கிட வைக்கும் இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிறந்த தோழிகளாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே திரிவார்கள்.
இந்த நிலையில் சில விஷயங்களில் 3 மாணவிகளில் ஒரு மாணவிக்கும் மற்ற 2 மாணவிகளுக்கும் திடீரென்று மோதல் ஏற்பட்டது. அதன்பிறகும் அவர்கள் தோழிகளாகவே பழகி வந்தனர்.
இந்த நிலையில் 2 தோழிகளும் சேர்ந்து மற்றொரு தோழியை பழிவாங்க திட்டமிட்டனர். இதுவரை யாருமே அனுபவித்திராத வேதனையை அவளுக்கு கொடுக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டனர். அதற்காகவே இருவரும் கூடி ஆலோசித்தனர். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
சம்பவத்தன்று 2 தோழிகளும் மாணவிக்கு போன் செய்தனர். அப்போது வீட்டில் தனியாக இருப்பதாக மாணவி கூறினார். இதுதான் அவளை பழிவாங்க நல்ல சந்தர்ப்பம் என்று தோழிகள் கருதினர்.
தங்களுக்கு தெரிந்த ஆண் நண்பர் ஒருவரை 2 தோழிகளும் மாணவியின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆண் நண்பருடன் தோழிகள் தனது வீட்டிற்கு வந்திருப்பதை பார்த்ததும் மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தோழிகள் இருவரும் ஆண் நண்பரை விட்டு மாணவியை கற்பழிக்க வைத்தனர். அவர் மாணவியை கற்பழித்தபோது துப்பாக்கி முனையில் 2 தோழிகளும் செல்போனில் படம் பிடித்தனர்.
பின்னர் மாணவி கற்பழிப்பு வீடியோவை இணைய தளத்தில் பரப்பினர். இந்த நிலையில் இணையதளத்தில் வீடியோ பரவுவதை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் 2 தோழிகளையும் கைது செய்தனர். மாணவியை கற்பழித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating