காதலித்த பாவம்?: இளம்பெண்ணுடன் பெற்றோரையும் சேர்த்து சுட்டுக் கொன்ற உறவினர் கூட்டம்…!!
பீகார் மாநிலம், ரோட்டாஸ் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்த பாவத்துக்காக அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது பெற்றோரையும் சேர்த்து ஒரு கும்பல் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சசாரம் மாவட்டத்தில் உள்ள விகரம்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா குமாரி(19). அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான ஒரு வாலிபரை புஷ்பா உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு புஷ்பாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்றிரவு திடீரென புஷ்பாவின் வீட்டிற்கு சென்ற சில உறவினர்கள் இந்த காதல் விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது உறவினர்களில் இருவரான பிரதிப் மற்றும் அமித் ஆகியோர் புஷ்பாவை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். தடுக்கவந்த புஷ்பாவின் தாயையும் அவர்கள் வெறித்தனமாக சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இதிலும் ஆவேசம் தணியாத அவர்கள் புஷ்பாவின் தந்தை வகில் யாதவ் என்பவரையும் துடிதுடிக்க வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவம் ரோட்டாஸ் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating