திருகோணமலை:காதலை பெற்றோர் ஏற்காததால் யுவதி தற்கொலை..!!
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேம் காமம் கிராமத்தைச் சேர்ந்த ராஜி ருசிக்கா என்ற யுவதி தன் காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேன்காமம் கிராமத்தைச் சேர்ந்த இப்பெண் தான் விரும்பிய இளைஞரை பெற்றோர் விரும்பவில்லை எதிர்ப்புக் காட்டுகிறார்கள் என்ற விரக்தி காரணமாக தனது வீட்டில் வைத்து தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எரிகாயங்களுடன் இப்பெண் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating