பெரிய மேட்டில் பால் வியாபாரி வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை…!!
Read Time:47 Second
பெரியமேடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் அக்பர் (40). பால் வியாபாரி.
இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆம்பூர் சென்று இருந்தார். நேற்று இரவு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கநகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். பெரியமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Average Rating