வங்காளதேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

Read Time:1 Minute, 41 Second

ba298fcf-a32d-4475-87ca-f256fa5707a6_S_secvpfவங்காளதேசத்தில், சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்து கோவில்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வங்காளதேச பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில், தீவிரவாத எதிர்ப்பு படையினர் நேற்று அதிகாலையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த 2 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசினர்.

உடனே அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் தடை செய்யப்பட்ட ஜமாத்-உல்-முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. அங்கு வெளிநாட்டினர் மீது சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு இந்த இயக்கமே காரணம் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் இரு கைகளையும் வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது…!!
Next post கர்ப்பிணி மீது லொரியை மோதிய சாரதி விளக்கமறிலில்…!!