நாடளாவிய ரீதியில் இன்றும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் நீர் வழங்கல் சபை ஊழியர்கள்…!!

Read Time:1 Minute, 51 Second

National Water Supply and Drainage Board_1தமது கோரிக்கைகளுக்கான தீர்வு வழங்கப்படாமையினால், இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

நேற்று மாலை 5 மணி முதல் மேலதிக நேர கடமைகளிலிருந்தும் இரவுநேர கடமைகளிலிருந்தும் விலகியுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெிவித்தார்.

2015 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சனிக்கிழமை முதல் மேலதிக நேர கடமைகளிலிருந்தது நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள் விலகியுள்ளனர்.

இதன் காரணமாக நேற்று முதல் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இது தொடர்பில் நாம் வினவியபோது தொழிற்சங்க நடவடிக்கையினால் நீர் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய நீர் விநியோக வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு…!!
Next post வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு..!!