‘தசாவதாரம்’ ஆடியோ விழாவில் ஜாக்கிசான்

Read Time:2 Minute, 13 Second

‘தசாவதாரம்’ ஆடியோ விழாவைதான் அனைவரும் ஆச்சரியமாக பேசுகிறார்கள். ஆச்சரியத்துக்கு காரணம், ஜாக்கிசான்! ஆசியாவிலிருந்து கிளம்பி அகிலத்தை ஆட்கொண்ட ஆக்ஷ்ன் புயல், ஜாக்கிசான்! பிப்ரவரியில் நடக்கயிருக்கும் ‘தசாவதாரம்’ இசை வெளியீட்டிற்கு இவரை அழைத்துவர முயற்சி செய்து வருகிறார், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஜாக்கிசானின் படங்களை இந்தியாவில் விநியோகித்து வந்தவர் ரவிச்சந்திரன். இதனால் ஜாக்கிசானுடன் அவருக்கு ஏற்கனவே அறிமுகமிருக்கிறது. அவரை இசை வெளியீட்டுக்கு அழைத்தால், படத்துக்கு சர்வதேச அளவில் கவனிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார் ரவிச்சந்திரன். இதற்காக அமெரிக்கா சென்று ஜாக்கிசானை சந்தித்துள்ளார் என்கின்றன தகவல்கள். இந்த சந்திப்பின் போது ‘தசாவதாரம்’ கமலின் பத்து வேடங்களையும், பாடல் காட்சிகளையும் ரவிச்சந்திரன் ஜாக்கிசானுக்கு போட்டுக் காண்பித்ததாக கூறப்படுகிறது. கமலின் வேடங்களைப் பார்த்த ஜாக்கிசான், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். இதே விழாவில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜூன் என அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களையும் அழைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. உலகம் முழுவதும் ‘தசாவதாரம்’ முந்நூறு கோடிகள்வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதுதான், இந்த பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு காரணம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புலிகளின் படுகொலைகள் மூலம் நாட்டில் சமானத்தை உருவாக்க முடியாது! -மூன்று தமிழ் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை
Next post புகை பிடித்தால் தலை வழுக்கையாகும்