பாம்பனில் குடிசைக்குள் புகுந்த சுற்றுலா பஸ்: 11 பேர் காயம்…!!
Read Time:1 Minute, 18 Second
திருவண்ணாமலை அருகே உள்ள தேசூர்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 32 பேர் ஒரு மினி ஆம்னி பஸ்சில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர். பஸ்சை களணாம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று இரவு மினி ஆம்னி பஸ் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே வந்து கொண்டிந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி மினி பஸ் ரோட்டோரத்தில் இருந்த குடிசைக்குள் புகுந்தது.
குடிசைக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால் பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த காளியப்பன் (வயது 25), தேவி (32), மல்லிகா (47) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாம்பன் சப்–இன்ஸ்பெக்டர் சிலைமணி சம்பவ இடம் வந்து காயம் அடைந்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating