திருமணத்தில் பெண் பலி

Read Time:1 Minute, 10 Second

ani_gra26.gifபீகார் மாநிலத்தில் திருமண விழாவின் போது கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டத்தில் பெண்மணி ஒருவர் பலியானார். பீகார் மாநிலத்தில் கோபால்பெஞ்ச் மாவட்டத்தில் பிஜேபி பிரமுகர் ஹரிநாராயண் சிங் மகள் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவருடைய மூத்த மருமகன் சஞ்சய் சிங், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவாறு துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கியிலிருந்து வெளியான தோட்டா கீதா சிங் என்பவர் உடலில் பாய்ந்தது. இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். இந்த சம்பவத்தையடுத்து சஞ்சய் சிங் தலைமறைவாகிவிட்டார். ஹரிநாராயண் சிங் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காவல்துறை இணையதளத்தில் ஆபாச படங்கள்
Next post 37 விடுதலைப்புலிகள் பலி