அடகு வைத்த நகையை மீட்டு தராததால் விரக்தி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை…!!

Read Time:2 Minute, 43 Second

3a75fa53-dbda-42f0-aa81-e2780d7aed4a_S_secvpfசெய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 30). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருக்கும், தேவி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன்கள் கோபிநாத் (4), லிங்கேஸ்வரன் (2).
சுதாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப செலவிற்காக தேவியின் 3 பவுன் நகையை அடகு வைத்ததாக கூறப்படுகிறது. அதனை மீட்டு தரும்படி பலமுறை தேவி கேட்டுள்ளார். சுதாகர் நகையை மீட்டு தராததால் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்த சுதாகரிடம் கடந்த சில நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டு, நகையை மீட்டு தரும்படி தேவி கேட்டுள்ளார். அதில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் தேவி மனமுடைந்து விரக்தியில் இருந்துள்ளார்.

கடந்த 26–ந்தேதி 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற தேவி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மாமியார் முனியம்மாள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வயல்வெளி கிணற்றில் 2 குழந்தைகளுடன் தேவி பிணமாக மிதந்துள்ளார். அதனை வயல்வெளிக்கு சென்ற விவசாயி வெங்கடேசன் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சுதாகரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் பிரபுசங்கரும் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பனில் குடிசைக்குள் புகுந்த சுற்றுலா பஸ்: 11 பேர் காயம்…!!
Next post ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்தது: தாஜ்மகால் வாழ்த்து…!!