செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு: நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியீடு..!!
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் புகைபடங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான புகைப்படத்தை கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது. ஒரு பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவு, பாறாங்கல் மற்றும் மணலால் மூடப்பட்டிருக்கும் காட்சியை அந்த புகைப்படம் காட்டுகிறது. இந்த நிலச்சரிவு சமீபத்தில் ஏற்பட்டு உள்ளதாகவும், பல கற்பாறைகள் சரிந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
Average Rating