கொள்ளையிட வந்தவர்களால் கர்ப்பிணி பெண் பாலியல் வல்லுறவு…!!
Read Time:1 Minute, 17 Second
இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஆறு மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கேதுலா பட்டி என்ற கிராமத்திற்குள் நேற்று காலை புகுந்த கொள்ளையர்கள் கிராம மக்கள் மூன்று பேரை கொடூரமாகத் தாக்கி அங்குள்ள வீடுகளில் கொள்ளையடித்தனர்.
வீட்டுக்குள் இருந்த பெண் ஒருவரை நகைகளை கழற்றுமாறு மிரட்டிய அந்த கொடூரர்கள் நால்வரும், அப்பெண்ணை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பெண் பொலிசில் அளித்த முறைப்பாட்டின் பேரில் நால்வரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating