கோவாவில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவன் கைது…!!
Read Time:1 Minute, 2 Second
கோவாவில் உள்ள டிவார் தீவு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிவார் தீவில் வசிக்கும் அந்தப் பெண் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அருகாமையில் வசித்துவரும் 16 வயது சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பாராமல் அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டதாக பெண்ணின் பெற்றோர் பழைய கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, குற்றவாளியை கைதுசெய்து, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
Average Rating