வைகை ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் பரிதாப சாவு..!!

Read Time:1 Minute, 47 Second

timthumbராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாளர் தெருவை சேர்ந்த ஞானவேல் மகன் கார்த்திக்ராஜா (வயது 12). அதே தெருவை சேர்ந்த சங்கர் மகன் சுதர்சன் கிஷோர் (10). இவர்கள் அங்குள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தனர்.

2 பேரும் நண்பர்களுடன் காக்காதோப்பு அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது தண்ணீரில் குதித்து விளையாடியபோது 2 பேரும் பள்ளத்தில் உள்ள சகதியில் சிக்கிக்கொண்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்களை காணாமல் உடன் சென்ற அவர்களது நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

உடனே அக்கம் பக்கத் தினர் இதுகுறித்து பரமக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் குதித்து மாணவர்களை தேடினர். ஆனால் அதற்குள் சிறுவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 2½ மணி நேர தேடலுக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்தன நிலையில் மாணவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது சிறுவனை காணவில்லை; பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!!
Next post ஏலியன்கள் விட்டுச்சென்ற 800 ஆண்டு பழமையான மொபைல் போன்…!!