காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது…!!

Read Time:2 Minute, 17 Second

948a6bc1-3166-43d3-ae14-e65bc2c71286_S_secvpfகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார் அளிக்க பரீதா பி(35) இன்று பனாஜி போலீசாரை அணுகியுள்ளார். அதன்பின்பு, துணை ஆய்வாளர் ஒருவர் புகார் குறித்து விசாரணை செய்துள்ளார். இதில் திருப்தியடையாத பரீதா மீண்டும் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணையில் திருப்தியில்லை என கூறி போலீசாரை குறை கூற தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சித்தந்த் ஷிரோத்கர் கூறுகையில், “பனாஜி காவல் நிலையத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்ட பரீதா பி என்ற பெண் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார். மேலும் ஷிரோத்கர் தனது புகாரில், தன்னையும் மற்றொரு பெண் கான்ஸ்டபிளையும் பரீதா காவல் நிலையத்தில் வைத்து தள்ளி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல் நிலைய கண்காணிப்பு கேமிராவில் பெண்ணின் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

பரீதாவுக்கு எதிராக ஐ.பி.சி.யின் 353 (பணியை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் பொது ஊழியரை அடித்தல் அல்லது குற்றம் புரிதல்), 427 (காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்துடன் துன்புறுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 11 வயது சிறுவன்…!!
Next post கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!