கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!
அவினாசியை அடுத்த பருத்தி காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியன் மகன் ஆனந்தன் (31). இவருக்கும் பிச்சம்பாளையம் குப்புசாமி மகள் சந்திரிகா(27) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
மேலும் கணவன் அடிக்கடி குடிபோதையில் வந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் சம்பவத்தன்று இரவு கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த சந்திரிகா, தனது கணவர் குளியலறைக்கு சென்றபோது வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் சந்திரிகா அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் ஆனந்தன் ஓடி வந்து காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா இறந்துபோனார். பலத்த தீக்காயமடைந்த ஆனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating