பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்கி தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!!
Read Time:1 Minute, 11 Second
புதுவண்ணாரப்பேட்டை நம்மையர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரஜ் (15). அங்குள்ள ஒரு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான்.
இன்று அவனுக்கு பிறந்த நாள். ஆனால் பெற்றோர் புத்தாடை வாங்கி தரவில்லை. இதனால் அவன் மனவருத்தத்துடன் இருந்தான்.
இதற்கிடையே வீட்டில் தனியாக இருந்த சூரஜ் இன்று காலை தூக்கு போட்டு கொண்டான். அதைப் பார்த்த அவனது தம்பி டீக்கடைக்கு ஓடி வந்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான்.
உடனே பதறியடித்து சென்ற அவர்கள் அவனை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
Average Rating