இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் குறுக்கிட்ட நபர் கொலை..!!
Read Time:1 Minute, 12 Second
வெலிகம – பண்டாரமுல்லை பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் குறுக்கிட்ட நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய குறித்த நபர் வெலிகம – பண்டாரமுல்லை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு அருகில் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர் அங்கு மோதலில் ஈடுபட்டிருந்தோரை திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அந்த குழுவில் இருந்த நபர் ஒருவர் இவரை கூரிய ஆயுதமொன்றினால் தாக்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றைய சந்தேச நபர்களை தேடும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating